

புத்ரா ஜெயா, பிப் 8-
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பை ஏற்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று மலேசியாவுக்கு சிறப்பு வருகை புரிந்தார்.
நேற்று மைன்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் மோடி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிலையில் இன்று புத்ரா ஜெயாவுக்கு சிறப்பு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு சடங்கு பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.
மலேசிய இந்திய உறவை வலுப்படுத்தும் அத்தியாயம் எனக் கூறி பிரதமர் மோடிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விருந்து கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks – Pejabat Perdana Menteri

