காப்பார் இந்து சங்கம் வட்டார பேரவை ஏற்பாட்டில் இரத்த தானம் முகாம்

காப்பார், பிப் 13-

மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவையின் ஏற்பாட்டில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர், கிள்ளான் அரச மாநகர மன்ற உறுப்பினர், இந்திய சமூக தலைவர் மேரு சட்டமன்றம் இணைந்து சுவாமி விவேகானந்தர் அவர்களின் 163 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு கிள்ளான் பொது மருத்துவமனை ஒத்துழைப்புடன் இரத்த தானம் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும்15.02.2026(ஞாயிற்றுக்கிழமை), காலை 10.00 முதல் மாலை 3.30 AEON BiG Klang (Batu Belah)Jalan Kapar என்னும் இடத்தில் நடைபெறவுள்ளது.

வட்டார பொதுமக்கள் அனைவரும் திரளாக வருகை தந்து கலந்து கொண்டு இரத்த தான செய்ய அன்புடன் அழைக்கிறோம். இந்நிகழ்வு முற்றிலும் இலவசம்.

மேலும் தகவலுக்கு திரு.சிவராம் அர்ஜுனன் அவர்களை தொடர்பு கொள்ளவும் :
கைப்பேசி :011-33172729
இரத்த தான செய்து உயிரை காப்பாற்றலாம்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles