இந்து மத சின்னம் அவமதிப்பு!கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! பாங்கி எம்.பி. வலியுறுத்து

கோலாலம்பூர் மார்ச் 11-
இந்துமதச் சின்னத்தை அவமதித்ததாக கூறப்படும் ஒரு நபரின் செயலைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் ஷாரெட்ஸான் ஜோஹன் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் குர்ஆனை அவமதித்த சம்பவத்தையும் அவர் கடுமையாக கண்டித்தது போலவே, இந்த மிகையான செயலும் கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதாகும் என்றார் அவர்.

“பல இனங்களும், மதங்களும் கொண்ட சமூகத்தில், மக்களிடையேயான ஒற்றுமை மிகவும் முக்கியமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.

“இன, மத வாதங்களை ஏற்படுத்தக்கூடிய எந்த செயல்களும் தவிர்க்கப்பட வேண்டும். எந்த மதத்தையும் பொருட்படுத்தாமல், மதத்தை அவமதிக்கும் அல்லது தூண்டுதல் ஏற்படுத்தும் செயல்களுக்கு அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

“நிலப் பயன்பாடு, விதிமுறைகளைப் பின்பற்றாமல் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் தொடர்பான பிரச்சினைகள் எந்த வகையிலும் இத்தகைய செயல்களை நியாயப்படுத்தாதுஎன்று அவர் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles