
கோலாலம்பூர் ஜூலை 21-
நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
பக்கத்தான் ஹராப்பான் மற்றும் தேசிய முன்னணி இடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பக்கத்தான் ஹராப்பான் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை முதல் சூறாவளி பிரச்சாரத்தில் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நெகிரி மாநில பக்கத்தான் ஹராப்பான் அரசாங்கம் மாநில மக்களின் மேம்பாட்டுக்கு முக்கிய பங்காற்றி உள்ளது.
இனம் நிறம் மதம் பார்க்காமல் அனைத்து இன மக்களின் மேம்பாட்டுக்கு நெகிரி செம்பிலான் மாநில அரசு சேவையாற்றி உள்ளது.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாளை முதல் சூறாவளி பிரச்சாரத்தில் களம் இறங்குவது நெகிரி செம்பிலான் மாநிலத்தை மீண்டும் பக்கத்தான் ஹராப்பான் தக்க வைக்கும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

