
மலேசியத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மனிதவள அமைச்சர் சிவக்குமாரின் தமிழ் பத்திரிகை செயலாளருமான செ.வே முத்தமிழ் மன்னன் அவர்களின் தாயார் வேலாயி அம்மாள் இன்று காலமானார்.
பத்திரிகைத் துறையில் நீண்ட காலம் அனுபவமுள்ள செ.வே மலைச்செல்வன், முத்தமிழ் மன்னனின் தாயாருமான வேலாயி அம்மாள், இன்று பிற்பகல் ஒரு மணி அளவில் உடல் நலக்குறைவால் செர்டாங் மருத்துவமனையில் காலமானார்!
ஆசிரியர் மலைச்செல்வன், முத்தமிழ் மன்னன் குடும்பத்தாருக்கு ஊடக குடும்பத்தினர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர்.
அன்னாரின் இறுதிச் சடங்கு நாளை
மார்ச் 28 ஆம் திகதி பிற்பகல் 12 மணியளவில் No.21, jalan 5, taman indah bangi என்ற முகவரியில் நடைப்பெற்று, செராஸ் மின் சுடலையில் தகனம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

