பல்கலைக்கழக மாணவி வினோஷினி
மரண விசாரணையை இழுத்தடிப்பது ஏன்?

கெடாவில் உள்ள யுனிவர்சிட்டி உத்தாரா மலேசியா (UUM) பல்கலைக்கழகத்தின் நான்காவது செமஸ்டர் கணக்கு துறையில் படித்து வந்த மாணவி, வினோசினி திடீர் மரணம் அடைந்தார்.

மின்சாரம் தாக்கியதாக சந்தேகிக்கப்படும் அறையில் அவர் இறந்து கிடந்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் மரணம் அடைந்து
ஐந்து மாதங்களுக்கு மேலாகியும், அதிகாரிகள் இன்னும் அவரது மரண விசாரணை மை முடிக்கவில்லை.

UUM அதிகாரிகள் மரணத்திற்கான காரணத்தை ஊகித்தவர்களுக்கு உடனடியாக அறிவுரை கூறினாலும் இன்னும் இழுத்தடிப்பது ஏன் என்று பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.

அவரது தந்தை எஸ்.சிவகுமார் ராஜூ தனது மகளின் மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அட்டர்னி ஜெனரலிடம் (ஏஜி) கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles