விசாரணை முடியும் வரை Rela காவலாளி பணி இடைநீக்கம்! PERKESO அதிரடி நடவடிக்கை

கோலாலம்பூர் ஜூன் 30-
பினாங்கு Perkeso அலுவலகத்தில் பெண் ஒருவர் தடுத்து நிறுத்திய ரேலா பணியாளரின் எதிர்பாராத நடவடிக்கையை Perkeso மிகவும் கடுமையாக எடுத்துக் கொள்கிறது என்று அதன் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோஸ்ரீ டாக்டர் அஸ்மான் இன்று தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பில் உள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

வாடிக்கையாளர்கள் ஆடை அணிவதைத் தடுக்க Perkeso நிர்வாகம் அல்லது பினாங்கு மாநில Perkeso அலுவலக மேலாளரிடமிருந்து எந்தவொரு உத்தரவும் ரேலா ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.

என்ன நடந்தது என்பது Perkeso நிர்வாகத்தின் அறிவுக்கு அப்பாற்பட்டது என்பதையும், ரேலா ஊழியர்கள் தங்கள் பாதுகாப்புக் கட்டுப்பாட்டின் அதிகார வரம்பிற்குப் புறம்பாகச் செயல்பட்டுள்ளனர் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறோம் .

அதன்படி, சம்பந்தப்பட்ட ரேலா ஊழியரிடம் விளக்கம் கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்த புகார் மீதான விசாரணை முடியும் வரை அந்த ரேலா ஊழியர் பணி இடைநீக்கம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles