

கோலாலம்பூர்
ஜூலை 11-
மலேசியாவுக்கு குறுகிய கால வருகையை மேற்கொண்டிருக்கும் இந்தியாவின் தற்காப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் சிவகுமார் சந்தித்து உரையாடினார்.
மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்பாட்டில் நேற்றிரவு தலைநகரில் நட்சத்திர தங்கும் விடுதியில் நடைபெற்ற விருந்து உச்சரிப்பில்
இரு நாடுகள் இடையிலான உறவுகள் மேலும் வலுவடையும் வகையில் இருவரும் பேச்சுவார்த்தையை நடத்தினர்.
இந்த விருந்து நிகழ்ச்சியில் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி, மலேசியாவுக்கான இந்திய தூதர் பி.என். ரெட்டி, முன்னாள் சுகாதார அமைச்சர் டான்ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

