
கோலாலம்பூர் ஜூலை 18-
வெளிநாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் அறிவார்ந்த மலேசிய தொழிலாளர்களை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரும் முயற்சிகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது என்று மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
Telent Corp மூலம் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதுவரை 5,000 அறிவார்ந்த மலேசியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
அவர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவது எளிதான காரியமல்ல.
இந்த முயற்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று இன்று Oriental daily News paper க்கு வழங்கி சிறப்பு நேர்காணலில் அவர் இதனை தெரிவித்தார்

