


செர்டாங் ஆக 15-
மனிதவள அமைச்சினால் வழங்கப்படும் தீவேட் தொழில் திறன் கல்வியை முடித்த மாணவர்களில் 88.6 விழுக்காட்டினருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
மனிதவள தொழில் கல்வியை முடிக்கும் பட்டதாரி மாணவர்களில் 34.7 விழுக்காட்டினர் முன் கூட்டியே வெற்றிகரமாக ஒரு வேலை வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
மேலும் ILJTM எனப்படும் தொழில் திறன் துறையில் தங்கள் படிப்பை முடித்து, மொத்தம் 70.8% மாணவர்கள் அதே துறையில் வேலை வாய்ப்பைப் பெற முடிந்ததுள்ளது என்று அவர் சொன்னார்.
ஆகவே தீவேட் தொழில் கல்வி மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை அமைத்து கொடுத்துள்ளது.
படித்த கல்விக்கு ஏற்ற வகையில் வேலை கிடைப்பதால் தீவேட் இரண்டாம் தர கல்வியாக கருதாமல் மாணவர்கள் உற்சாகத்துடன் இந்த கல்வியை பயில முன் வரும்படி அவர் கேட்டுக் கொண்டார்.
குறிப்பாக இந்திய மாணவர்களும் தீவேட் தொழில் திறன் கல்வியை பயில அதிக வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்று அவர் சொன்னார்.
செர்டாங் Meaps மாநாட்டு மண்டபத்தில் நேற்றும் இன்றும் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 32 தொழில் திறன் கல்வி மையங்களில் தேர்ச்சி பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் டிப்ளோமா பட்டம் பெற்றனர்
இந்த பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை ஏற்ற பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

