மனித மூலதன மேம்பாட்டை அதிகரிக்கும் AirAsia அகாடமியுடன் இணைந்து செயல்பட முயற்சிகள் தொடரும்! அமைச்சர் சிவகுமார் அறிவிப்பு

கோலாலம்பூர், செப் 2-
நேற்று
KL சென்ட்ரலில் உள்ள AirAsia அகாடமிக்கு வருகை புரிந்தபோது
ஏர் ஏசியா அகாடமியின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரீன் உமர் தலைமையிலான பணிக்குழுவினரால் கல்வி தொழில்நுட்ப தளம் மற்றும் பாட மேலாண்மை குறித்து எனக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

தற்போதுள்ள தேவையை பூர்த்தி செய்ய தொழில் துறைக்கு தேவையான திறன்கள் அல்லது பாடத்திட்டத்தை அடையாளம் காண்பது உட்பட பயன்படுத்தப்படும் முறையை மிகவும் பாராட்டுகிறேன்.

இந்த முயற்சியால் பணியாளர்கள் இடம் பெறவும், தொழிலில் ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் தெரிவித்தார்.

AirAsia Ride இன் E-Hailing சேவை மற்றும் AirAsia இன் மனிதவளத் துறை பற்றியும் எனக்கு விளக்கப்பட்டது.

இந்த தகவலை பகிர்ந்த அனைவருக்கும் ஏர் ஏசியா குழுவிற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

AirAsia அகாடமிக்கு இடையே உள்ள கூட்டுறவு உறவு பலப்படுத்தப்பட்டு அதன் முயற்சிகள் விரிவடையும் என்று நம்புகிறேன்.

நாட்டில் TVETக்கு அதிகாரமளித்தல் உட்பட அனைத்து தரப்பினரின் நலன்களையும் கருத்தில் கொண்டு, மனித மூலதன மேம்பாட்டை அதிகரிக்கும் முயற்சியில் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட மனிதவள அமைச்சு இதுபோன்ற முயற்சிகளைத் தொடரும் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles