
ஜெலாப்பாங், செப் 6-
எஸ்பிஎம் தேர்வில் 7ஏ பெற்று சிறந்த அடைவு நிலையை பதிவு செய்த மாணவி சர்மிலி தினகரனுக்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் மடிக்கணினியை வழங்கி உதவி புரிந்தார்.
ஜெலாப்பாங் வட்டாரத்தை சேர்ந்த மாணவி சர்மிலி
தற்போது
SMK Methodist (ACS) Ipoh, Perak பள்ளியில் எஸ்டிபிஎம் உயர் கல்வியை பயின்று வருகிறார்.
இந்த மாணவியின் எதிர்கால கல்வி சிறப்பாக இருக்கும் வகையில் மனிதவள அமைச்சர் சிவகுமார் மடிக்கணினியை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது.

