
மக்கள் நலன்களுக்கு
முன்னுரிமை வழங்கும்
Rapat இயக்கத்திற்கு
அமைச்சர் சிவகுமார்
10,000 வெள்ளி நன்கொடை!
புத்ரா ஜெயா செப் 23-
Persatuan Rapat Rakyat (RAPAT) எனப்படும் மக்கள் நலன்களுக்கு போராடும் ராப்பாட இயக்கத்திற்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் 10,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இந்த நன்கொடையின் மூலம் ராப்பாட் இயக்கம் மக்களிடையே சிவில் மதிப்புகள், உணர்வை வளர்க்கும் முயற்சிகள், உரையாடல் அமர்வுகள், தொடக்க உரைகள் மற்றும் மக்கள் நலன்புரி நடவடிக்கைகள் போன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த முடியும் என்று அமைச்சர் சிவகுமார் தெரிவித்தார்.
இந்த பங்களிப்பு நிதி ஆதரவின் ஒரு வடிவம் மட்டுமல்ல, உன்னதமான இலக்குகளுக்காக போராடுவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவாகவும் உள்ளது என்றார் அவர்.
அதன் தலைவர்
Tuan Mustaffa Kamil Ayub உட்பட அனைத்து உறுப்பினர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதில் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று அவர் சொன்னார்.

