
கோலாலம்பூர் செப் 29-
இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு உதவும் வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு அமைச்சின் கீழ் ஒரு முக்கியமான கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசாங்கம் ஒதுக்கியுள்ள மானியங்கள் முறையாக இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு கிடைத்தல், தகவல்கள் பெறுதல், பதிவு செய்யும் வழிமுறைகள் ஆகியவற்றை கேட்டு தெரிந்துக் கொள்ளலாம்.
இது தொடர்பாக
தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணை அமைச்சர் ஒய்.பி. செனட்டர் சரஸ்வதியுடன் இந்திய தொழில்முனைவோர்களுடன் முக்கிய கலந்துரையாடல் நாளை சனிக்கிழமை Auditorium Angkasa, Angkasa, Wisma Ungku Abdul Azizயில் பிற்பகல் 1 மணி முதல் நடைபெறும்.
ஆர்வம் உள்ள இந்திய சிறு தொழில் வணிகர்கள் இதில் கலந்து கொள்ள அழைக்கப் படுகிறார்கள்.
தேதி: செப்டம்பர் 30, 2023
நேரம்: மதியம் 1:00 மணி
இடம்: ANGKASA, Wisma Ungku Abdul Aziz

