
மலாக்கா, அக் 7-
உதவிகள் தேவைப்படும் வசதி குறைந்த மக்களுக்கு HRD Corp நிறுவனத்தின் சமூக நல உதவிகள் பெரும் பங்கு வகிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
CSR எனப்படும் HRD Corp நிறுவனத்தின் சமூக நல சேவையை பெரிதும் பாராட்டுகிறேன்.
இது வசதி குறைந்த மக்களுக்கு பங்களிக்கிறது என்பதையும் நான் .
புரிந்து கொள்கிறேன்
குறிப்பாக உதவிகள் தேவைப்படும் மக்களுக்கு. நம்பிக்கையுடன்
இந்த பங்களிப்பு வாழ்க்கையின் சுமையை குறைக்கிறது என்று அவர் சொன்னார்.
அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் இது உதவுகிறது என்று இன்று மலாக்காவில் நடைபெற்ற ஜெலாஜா மடானி நிகழ்வை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த போது மனிதவள அமைச்சர் வ சிவகுமார் இதனைத் தெரிவித்தார்.
இதனிடையே HRD Corp தொழில் திறன் கல்வி பயிற்சியை முடித்தவர்களுக்கு
இன்று சான்றிதழை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த நிகழ்வில் மடிக் கணினியை பெற்ற
சிறந்த மாணவர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன்.
இந்த மடிக் கணினிகள் மாணவர்களின் கல்விக்கு பெரிதும் உதவுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த நிகழ்வில் HRD Corp நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

