
புத்ரா ஜெயா அக் 4-
குறைந்தபட்ச ஊதிய உத்தரவை மனிதவள அமைச்சகம் பரிசீலனை செய்து வருகிறது என்று மனித வள அமைச்சர் வ.சிவகுமார் தெரிவித்தார்.
இது தேசிய ஊதிய ஆலோசனைக் குழுவின் ஊடாக மேற்கொள்ளப்படுகிறது என்றார்.
தேசிய ஊதிய ஆலோசனைக் குழு சட்டம் 2011 இன் படி இரண்டு வருட இடைவெளியில் இது செய்யப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறிப்பாக குறைந்தபட்ச ஊதிய உத்தரவை அமல்படுத்துவதன் மூலம் ஊதியத்தை மறுசீரமைப்பதற்கான நிகழ்ச்சி நிரலில் அரசாங்கம் தீவிரமாக உள்ளது .
“நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்க்கைச் செலவில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில், குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் மறு மதிப்பீடு அவ்வப்போது செய்யப்படும் என்று அவர் கூறினார்.
ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட முதலாளிகளுக்கு பிராந்தியத்தைப் பொருட்படுத்தாமல், அனைத்துத் துறைகளுக்கும், மாதந்தோறும் குறைந்தபட்ச ஊதியம் RM1,500 என்ற குறைந்தபட்ச ஊதிய உத்தரவு மே 1, 2022 அன்று இயற்றப்பட்டது.
முற்போக்கு ஊதியக் கொள்கையானது, தன்னார்வமாகவும், ஊக்கத்தொகையின் அடிப்படையிலும், உற்பத்தித்திறனுடன் தொடர்புடையதாகவும் இருக்கும்.
இது உற்பத்தித்திறன்-
இணைக்கப்பட்ட ஊதிய முறையை (PLWS) பூர்த்தி செய்யும்.
PLWS-ஐ நடைமுறைப்படுத்துவது,உற்பத்தித்திறன் அதிகரிப்பு மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றுடன் இணைந்து ஊதிய உயர்வு இருப்பதை உறுதி செய்கிறது என்றார்.
“இந்த அமைப்பு ஊழியர்களுக்கு சிறந்த உற்பத்தித்திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் ஊதியத்தில் நியாயமான பங்கைப் பெற அனுமதிக்கும் என்று அவர் சொன்னார்.
செப்டம்பரில், 98,119 முதலாளிகள் PLWS-ஐ நடைமுறைப் படுத்தியுள்ளனர்.
இதன் மூலம் 59 லட்சம் பணியாளர்கள் அனைத்து வேலைவாய்ப்பு நிலைகளிலும் பயனடைந்துள்ளனர்.
புதிய பட்டதாரிகளுக்கான அரைதிறன் மற்றும் ஆரம்ப ஊதியங்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் ஊதியம் மற்றும் சம்பள நிர்ணயத்தின் செயல்திறனை அதிகரிக்க, சம்பள நிர்ணயத்திற்கான விரிவான வழிகாட்டுதலை மறுபரிசீலனை செய்து நிறுவ வேண்டிய அவசியம் உள்ளது என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

