
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வசதி குறைந்த 100 இந்திய குடும்பங்களுக்கு அன்பளிப்புகளை வழங்க சைம் டார்பி நிறுவனம் முன் வந்துள்ளது. தீபாவளிக்கு தேவையா அனைத்து பொருட்களும் அடங்கிய அன்பளிப்பு கூடைகள் ரவாங்கில் சோன் 15 பகுதியை சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டது. தமது சேவைக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செலாயாங் நகராண்மைக் கழக உறுப்பினர் எலிஸ் சோ சைம் டார்பி நிறுவனத்துடன் பேச்சு நடத்தி பொருட்களை பெற்று தந்தார். இரு தினங்களுக்கு முன்பு ரவாங் சட்டமன்ற உறுப்பினர் சுவா வெய் கியாட், எலிஸ் சோ, சைம் டார்பி நிறுவனத்தின் தொடர்பு பிரிவு தலைவர் ஹிஷாம் சாமா ஆகியோர் மக்களுக்கு உதவி பொருட்களை நேரடியாக வழங்கினர்.

