
செலாயாங் பசார் போரோங்கில் வேலை செய்யும் தொழிலாளர்களின் சம்பளம் முறையாக வங்கியில் செலுத்தப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் கேட்டுக் கொண்டார்.
இன்று பாசார் போரோங் காய்கறிகள் சந்தைக்கு வருகை புரிந்தபோது பெரும்பாலான முதலாளிகள் தங்களது தொழிலாளர்களுக்கு மாதம் சம்பளத்தை ரொக்கமாக வழங்குகிறார்கள் என்பது தெரிய வருகிறது என்றார்.
தொழிலாளர்களின் சம்பளத்தை வங்கியில் செலுத்த வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தி வருகிறது.
இதை பாசார் போரோங் முதலாளிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் போடப்படுகிறது என்பதை உறுதி செய்ய இது வழி வகுக்கிறது என்றார் அவர்.
ஆகவே அனைத்து முதலாளிகளும் தங்களது தொழிலாளர்கள் சம்பளத்தை வங்கியில் செலுத்தும் படி அவர் கேட்டுக் கொண்டார்.
இன்று செலாயாங் பசார் போரோங்கிற்கு வருகை புரிந்த மனிதவள அமைச்சர் சிவகுமார் இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் நலன்கள் குறித்து நேரில் தெரிந்து கொண்டார்.

