

செராண்டா, பிப் 22-
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு மற்றும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் ஆகியோர் நேற்று உலு சிலாங்கூர் தொகுதியில் களம் இறங்கினர்.
உலு சிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜனையும் அவர்கள் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினர். இந்த நட்புறவு சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் ஒன்றாக விவாதிக்கப்பட்டதாக கணபதிராவ் தெரிவித்தார்.
உலு சிலாங்கூர் தொகுதிக்கு வருகை புரிந்த ஒய்.பி.கணபதிராவ் மற்றும் ஒய்.பி.பப்பாராய்டு அவர்களுக்கு டாக்டர் சத்திய பிரகாஷ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

