
தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்கள் கீழுறுப்பு செய்ய வேண்டாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேட்பாளர்களாக தேர்வு செய்யப்படாதவர்கள் திறந்த மனதுடன் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
அதனை விடுத்து கீழறுப்பு வேலைகளில் ஈடுபட வேண்டாம்.
தேர்வு செய்யப்படாத வர்கள் கிழூறுப்பு வேளைகளில் ஈடுபட்டால் தேசிய முன்னணி
கோட்டையாக கூறப்படும் இடங்களில் நாம் தோல்வி அடையக்கூடும் சாத்தியம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
தேசிய முன்னணி பலவீனமாக இல்லை.
ஆனால் சொந்த வேட்பாளர்கள் முதுகில் குத்தும் கலச்சாரத்தினால் தேசிய முன்னணி வலுவாக இருக்கும் தொகுதியில்கூட கடந்த காலங்களில் நாம் தோல்வி காண நேரிட்டது என்பதை அவர் சுட்டி காட்டினார்.

