
கோலாலம்பூர், பிப் 26-
நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கும் எந்தவொரு தரப்பினரின் கோரிக்கையையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று மாட்சியைத் தங்கிய மாமன்னர் இன்று அதிரடியாக அறிவித்தார்.
இன்று 15வது நாடாளுமன்றத்தின் மூன்றாவது தவணையின் முதல் கூட்டத்தின் தொடக்க விழாவில் Sultan Ibrahim உரையாற்றுகையில் அனைத்துக் கட்சிகளும் அறிக்கையை ஏற்று உருவாக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“யாராவது அரசியல் செய்ய நினைத்தால் அடுத்த பொதுத் தேர்தல் வரை காத்திருங்கள். வெளிநாட்டில் உள்ள 33 மில்லியனுக்கும் அதிகமான மலேசியர்களின் வாழ்க்கை நிலைமைதான் எனது முன்னுரிமை என்பது அனைவருக்கும் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

