
பேராக் மாநிலத்தில் அதிக நாடாளுமன்றத் தொகுதிகளை வெல்ல பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி நம்பிக்கை கொண்டுள்ளது.
இந்த எதிர்பார்ப்பை நனவாக்க கட்சி உறுப்பினர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக் கொண்டுள்ளார்.
பேராக்கை வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்காக நான் கடுமையாக உழைக்கிறேன்
நாட்டை வழிநடத்தக் கூடிய மூன்று தலைவர்களின் பெயரை முன்வைத்த முன்னாள் துணைப் பிரதமர் துன் மூசா ஹீத்தாமிற்கு தாம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.
எனக்கு உதவக்கூடிய அந்த அறிக்கைக்காக துன் மூசா ஹீத்தாமிற்கு நன்றி.
நான் தகுதியானவன் என்றும் அனைத்துலக அளவில் செல்வாக்கு உள்ளவன் என்றும் அவர் கூறியுள்ளார் என டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.


