
கோலாலம்பூர் மார்ச் 9
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 9,500 புதிய நோயாளிகள் டயாலிசிஸ் சிகிச்சைக்கு பதிவு செய்யப்படுவதாக துணை சுகாதார அமைச்சர் டத்தோ லுகானிஸ்மன் அவாங் தெரிவித்தார்.
இதுவரை, சுமார் 4.7 மில்லியன் நபர்கள் சி.கே.டி நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற புள்ளிவிவரங்கள் கவலையளிக்கின்றது.
இதைச் சமாளிக்க, தடுப்பு, முன்கூட்டியே கண்டறிதல், ஆபத்து காரணங்களை திறம்பட நிர்வகித்தல் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய உத்திகள் உட்பட பல்வேறு விரிவான சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை.
நேற்று உலக சிறுநீரக தினம் 2024 தேசிய அளவிலான கொண்டாட்ட விழாவை தொடங்கி வைத்து பேசும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

