இராமகிருஷ்ண தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் விமரிசையாக நடைபெற்ற நவீன பெற்றோரின் எதிர்காலம் நிகழ்வு!

பினாங்கு, மார்ச் 10-
நேற்று பினாங்கு மாநிலத் தமிழ்ப்பள்ளி சிறப்புக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட பேராசிரியர் டாக்டர் காதர் இப்ராஹிம் அவர்களின் முதல் பெற்றோர் பேச்சு “நவீன பெற்றோரின் எதிர்காலம்” நிகழ்வு SJKT ராமகிருஷ்ணா ஆசிரம மண்டபத்தில் வெற்றிகரமாக நடத்தினோம் என்று செனட்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.

இந்த பெற்றோருக்குரிய பேச்சு, நமது குழந்தைகளின் வளர்ச்சியை திறம்பட வழிநடத்துதல் மற்றும் ஆதரித்தல் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

பெற்றோருக்குரிய அறிவுரை, கல்வி மற்றும் குழந்தைப் பருவம் முதல் மாணவர் பருவம் வரையிலான அவர்களின் பயணத்தைத் தழுவுதல் ஆகியவற்றுக்கான நுண்ணறிவுகளை வழங்க முடிந்தது. இந்த நிகழ்விற்கு அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ மற்றும் பகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் கெல்வின் குமரன் ஆகியோரும் இதில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles