
நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலில் பெக்கான் நாடாளுமன்றத் தொகுதியில் நஜிப் துன் ரசாக்கின் மூத்த புதல்வர் நிஷார் நஜிப் போட்டிடுவது உறுதியாகியுள்ளது.
எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான 4 கோடியே 20 லட்சம் வெள்ளி மோசடி தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் ஒரு குற்றவாளியே என்று பெடரல் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இப்போது காஜாங் சிறையில் 12 ஆண்டு சிறை தண்டனை நஜிப் அனுபவித்து வருகிறார்.
தேர்தலில் போட்டியிட நஜிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக அவரின் மகன் நிஷார் போட்டியிடுகிறார்.

