

[3:19 pm, 01/04/2024] Manan: மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்தி கைவினைப் பொருட்களை தயாரிக்கும் பயிற்சியில் கலந்து கொண்ட இந்திய பெண்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
10 வார பயிற்சி படிப்பை முடித்த ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக பத்து காவான் நாடாளுமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.
B40 குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் இல்லத்தரசிகள் இந்தப் படிப்பின் மூலம் பயன் அடைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பிறை சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்தவர்கள்.
பத்து வாரம் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு இன்று சிறப்பு தேர்ச்சியை பெற்றிருக்கும் அனைவரையும் பிறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ ராஜூ மனதார வாழ்த்தினார்.
கவுன்சிலர் பொன்னுதுரை, பயிற்றுநர் பூஜா சிஸ் மற்றும் ஜேபிபிபி தலைவர் ஹரி ஆகியோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. பிறை சட்டமன்ற தொகுதியில் அடுத்த வாரம் முதல் நடைபெறும் தொழில் திறன் பயிற்சியில் அதிகமான ஒரு பங்கேற்று பயனடையுமாறு ஸ்ரீ சங்கர் கேட்டுக்கொண்டார்.
[3:20 pm, 01/04/2024] Sri Sanger: ok sir

