
கடந்த மூன்று பொதுத் தேர்தலில் பூச்சோங் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜசெக துணை தலைவர் கோபிந்த் சிங் டியோ இம்முறை டமான்சாரா நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் என்று ஜசெக தலைமை செயலாளர் அந்தோணி லோக் அறிவித்தார்.
ஜொகூர் பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பீ யின் இம்முறை பூச்சோங் தொகுதியில் போட்டியிடுகிறார்.
கிள்ளான் நாடாளுமன்ற தொகுதியில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் போட்டியிடுகிறார்.
அதேசமயம் பாங்கி நாடாளுமன்ற தொகுதியில் லிம் கிட் சியாங் அரசியல் செயலாளர் syahredzan ஆகியோர் போட்டியிடுகிறார்கள் என்று அவர் அறிவித்தார்.

