
காஸா நகர், ஏப் 5- கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் காஸா
தீபகற்பம் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 33,037
பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலுள்ள
சுகாதார அமைச்சு கூறியது.
மேலும், இந்த தாக்குதல்களில் 75,668 பேர் காயமடைந்துள்ளதாக
அமைச்சின் அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி
செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 62 பேர்
கொல்லப்பட்டதோடு மேலும் 91 பேர் காயமடைந்தனர் என்று அது
தெரிவித்தது.
– BERNAMA-ANADOLU