
மார்ச் 29 அன்று, தஞ்சோங் கிளிங்கின் பந்தாய் புத்ரியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்ட 19 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உட்பட மொத்தம் 23 ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை தஞ்சோங் கிளிங், மாலிம் மற்றும் தஞ்சோங் மிஞ்ஞாக் பகுதிகளைச் சுற்றி அனைத்து நபர்களும் கட்டம் கட்டமாகக் கைது செய்யப்பட்டதாக மலாக்கா காவல்துறைத் தலைவர் டத்தோ ஜைனோல் சாமா தெரிவித்தார்.
அனைத்து மாணவர்களும் தஞ்சோங் கிளிங்கைச் சுற்றியுள்ள வெவ்வேறு இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இந்த சம்பவத்தில் 15 வயது மாணவர் தாக்கப்பட்டதன் விளைவாக அவரது உடல் மற்றும் முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டதாக ஜைனோல் சாமா கூறினார்.
_ Selangor kini

