
கோலாலம்பூர், ஏப் 10- மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர் நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
கடந்த ரம்ஜான் மாதத்தின் போது செய்யப்பட்ட அனைத்து நற்காரியங்களும் அல்லாவினால் ஆசீர்வதிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்று தாங்கள் பிரார்த்தனை செய்வதாக சுல்தான் இப்ராஹிமின் அதிகாரபூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் அரச தம்பதியர் தெரிவித்தனர்.
ஷியாவால் மாதம் மகிழ்ச்சி, அருளப்பட்ட கருணை மற்றும் நன்றியுடனும் வரவேற்கப்படுகிறது என்று பேரரசர் கூறினார்.
Bernama

