
செ.வே. முத்தமிழ் மன்னன்
கோலாலம்பூர் ஏப்ரல் 10-
மடானி அரசாங்கத்தின் பாடு தரவு தளம் இன்னமும் ஒரு புரியாத புதிராக இருக்கிறது என்று பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி இன்று தமது முகநூலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் மாநில அரசுகளும் இது தொடர்பாக பல்வேறு ஐயங்களை எழுப்பியுள்ளன.
ஆனால் அதற்கு முழு விளக்கம் தர வேண்டிய பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி இன்னமும் மழப்பிக் கொண்டிருக்கிறார்.
பி40 மக்களுக்கு உதவுவதற்காக இந்த பாடுதரவு தளம் அமைக்கப்பட்டாலும் ஒட்டுமொத்த மலேசியர்களை அதில் பதிய சொன்னது ஏன் என்று அவர் கேள்வியை முன்வைத்தார்.

