
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு மேல் பத்தாங் காலியில் நடைபெறும் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்கிறார்.
பண்டார் உத்தாமா பத்தாங் காலி பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமை தொழுகையிலும் அவர் கலந்து கொள்கிறார்.
இந்த பொது உபசரிப்பில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி உட்பட பல முக்கிய பிரமுகர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பெர்னாமா

