
சிலாங்கூர் மாநிலத்தில் சிறு தொழில் தொடங்க விரும்பும் பெண் தொழில் முனைவோருக்கு 50,000 வெள்ளி வரை மூலதனக் கடனுதவியை யாயாசான் ஹிஜ்ரா வழங்குகிறது.
விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் பிரசுரத்தின் கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது மேலும் தகவலுக்கு அருகிலுள்ள ஹிஜ்ரா கிளையை தொடர்பு கொள்ளலாம் என்று அது தெரிவித்தது.
உற்பத்தி மற்றும் சேவைகளை சந்தைப்படுத்துவதற்கான திறனை அதிகரிக்க டிஜிட்டல் மார்க்கெட்டிங் முறை உதவுகிறது. இதன் மூலம் இணைய விற்பனை வாயிலாக லாபத்தை அதிகரிக்க முடியும். இது குறித்து மேலும் தகவலுக்கு www.hijrahselangor.com என்ற அகப்பக்கத்தை பார்வையிடலாம்.
Selangor kini

