
காஸா, ஏப் 13- காஸா தீபகற்பத்தின் மத்தியில் உள்ள நுசெய்ராட் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதல்களில் காயமுற்றவர்களில் சில ஊடகவியலாளர்களும் அடங்குவர் என்று அனாடோலு செய்தி நிறுவனம் கூறியது.
காஸா மீதான தாக்குதல் குறித்த செய்தியை வெளியிட்ட டி.ஆர்.டி. அரபிக் தொலைக்காட்சியின் கள நிருபரும் இந்த தாக்குதல்களில் காயமுற்றவர்களில் அடங்குவார் என்று அது தெரிவித்தது.
கடந்தாண்டு 7ஆம் தேதி முதல் அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தொடர் தாக்குதல்களின் இதுவரை 33,600 பாலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்..
– Bernama-Anadolu

