
பூர்வீகக் குடியினர் பங்கு கொள்ளும் பிஸ்கட் மற்றும் கப் கேக் செய்யும் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து 5 நாட்களுக்கு தாப்பாவில் நடைபெற்று வருகின்றன.
பூர்வீகக் குடியினர் 75 பேர் இந்தப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டுள்ளனர்.
தாப்பா வாழ் மக்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப, அவர்களுக்கான வருமானத்தை ஈட்டுவதற்கு இது போன்ற பயிற்சிகள் பேருதவியாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
எனவேதான் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும், மனிதவள அமைச்சருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ எம்.சரவணன் அக்ஷ இதுபோன்ற பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
வெறும் பயிற்சிகள் மட்டுமல்லாது, பயிற்சிகளில் பங்கெடுப்பவர்களுக்கு அதற்கான பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

