
காளிதாஸ் சுப்ரமணிம்
ஷா ஆலம் ஏப்ரல் 15-
இந்தியர்கள் எதிர்கொள்ளும் விவகாரங்களைக் கையாள அரசாங்கம் கடுமையாக பாடுபடும்.
அதே சமயம் அரசாங்கம் ஒருபோதும் இந்தியர்களை புறக்கணித்தது இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
நாம் ஒரு குழுவாக இணைந்து இந்திய சமுதாயத்திற்கு பணியாற்றுவோம்.
நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றினால் முன்னேறலாம்.
குறைகளை சொல்லி கொண்டிருக்காமல் ஒன்றாக இணைந்து வேலை செய்தால் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் சொன்னார்.
நான் பிரதமராக இருக்கும் வரைக்கும் அனைத்து இன மலேசிய மக்களையும் கவனிப்பேன்.
இந்திய சமுதாயத்திற்கும் இந்த அரசாங்கம் பல வகைகளில் உதவிகளை வழங்கி வருகிறது.
மித்ராவுக்கு 100 மில்லியன் மட்டுமே வழங்கப்படவில்லை.
இந்திய மாணவர்களுக்கு பெட்ரோனஸ் உபகாரச் சம்பளம், இந்திய இளைஞர்களுக்கு தீவேட் தொழில் திறன் கல்வி பயிற்சியாளர்கள், தமிழ்ப் பள்ளிகளின் மேம்பாட்டிற்கு உதவிகள், டூரோன் பயிற்சி திட்டங்கள் உட்பட பல உதவிகள் வழங்கப்படுவதாக அவர் சொன்னார்.
இந்திய சமுதாயத்திற்கு அரசாங்கம் உதவவில்லை என்று கூறுவதில் உண்மை இல்லை என்று அவர் மறுத்தார்.
அனைத்து இனத்தையும் அரசாங்கம் அரவணைத்து செல்கிறது என்று டாக்டர் அம்பேத்கர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

