
கோலாலம்பூர், ஏப் 16- மத்திய கிழக்கு நெருக்கடியின் எதிரொலியாகச்
சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள மலேசிய மாணவர்களை தாயகம்
கொண்டு வருவது உள்பட அவசியமாக எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட
நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்டத் தரப்பினருடன் உயர்
கல்வியமைச்சு விவாதிக்கவுள்ளது.
தற்போதை தரவுகளின் படி ஜோர்டானில் 1,872 மலேசிய மாணவர்களும்
சிரியாவில் 37 மாணவர்களும் ஈரானில் எட்டு மாணவர்களும் உள்ள
வேளையில் லெபனான் மற்றும் ஈராக்கில் யாரும் பயிலவில்லை என்று
உயர் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியது.
bernama

