
ஷா ஆலம், ஏப் 17- ‘பெண்‘ எனப்படும் வளப்பம், ஆளுமை மற்றும் வழமை
திட்டத்தை சிலாங்கூரில் அமல்படுத்துவது தொடர்பில் மாநில வறுமை
ஒழிப்பு ஆட்சிக்குழு தொழில்முனைவோர் ஆட்சிக்குழுவுடன் சந்திப்பு
நடத்தவுள்ளது.
இந்திய மகளிர் தொழில்முனைவோருக்கு உதவும் நோக்கிலான இந்த
‘பெண்‘ திட்டத்திற்காக 5 கோடி வெள்ளியை ஒதுக்கீடு செய்த ஒற்றுமை
அரசாங்கத்தின் நடவடிக்கையை தாம் பெரிதும் வரவேற்பதோடு
இத்திட்டத்தின் வெற்றியை உறுதி செய்ய இதன் தொடர்பான
தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவும் தாங்கள் தயாராக உள்ளதாக மாநில
மனித வள மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
இந்திய சமூகத்தில் உதவி தேவைப்படும் நிலையிலுள்ள மகளிர் மற்றும்
தொழில்முனைவோர் இத்திட்டத்தின் வாயிலாக பயன்பெறுவதை உறுதி
செய்வதற்கு இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் துறை
ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமியுடன் தாம் விரைவில்
சந்திப்பு நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
selangor kini

