
அங்காரா, ஏப் 18- காஸாவில் எந்த பாவமும் அறியாத 14,000க்கும் மேற்பட்ட சிறார்களைப் படுகொலை செய்ததன் மூலம் நாஜி தலைவர் அடோல்ப் ஹிட்லரையும் இஸ்ரேல் மிஞ்சி விட்டது என்று துருக்கிய அதிபர் கூறினார்.
மேற்கத்திய நாடுகளின் நிபந்தனையற்ற ஆதரவின் வாயிலாக காஸா மற்றும் மேற்கு கரையில் இஸ்ரேல் மேற்கொண்ட இந்த இனப்படுகொலை மனுக்குல வரலாற்றில் அழிக்க முடியாத களங்கமாக இருக்கும் என்று அதிபர் ரிக்கேப் தாயிப் எர்டோகன் தெரிவித்தார்.

