
மா.பவளச்செல்வன்
கோலாலம்பூர் ஏப்ரல் 19-
மலேசிய இந்திய சிகை அலங்கரிப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக ராஜசேகரன் இன்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
23ஆம் ஆண்டு ஆண்டுகூட்டமும் தேர்தலும் இன்று கோலாலம்பூர் சீன மண்டபத்தில் நடைப்பெற்றது.
சங்கத்தின் துணைத் தலைவராக பேராவின் வி. விஜயக்குமார், செயலாளராக எம் ஜெயகுமார், துணை செயலாளராக எம்.மீனாகுமார், பொருளாளராக எஸ். மாநில ராஜா , துணை பொருளாளராக கே. லிங்கநாதன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் டத்தோ டி.மோகன் சிறப்பு செய்து வாழ்த்தினார்.

