
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலகுபு பாரு ஏப்ரல் 22-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆலயங்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சனைகளை மாநில ஆட்சிக்குழு உறுப்பினர பாப்பாராய்டு உலுசிலாங்கூர் இந்து சங்கத்தைன் நேரில் சந்தித்து கேட்டிருந்தார்.
கோலகுபு பாருவில் உள்ள கம்போங் அசாம் கும்பாங்கின் நடைபெற்ற இந்த சந்திப்பு கூட்டத்தில் இந்து சங்கம் முன் வைத்த கோரிக்கைகளை உன்னிப்பாக பரிசீலித்த ராயுடு அவற்றுக்கு படிப்படியாக தீர்வு காண முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
பரிவு மிக்க சிலாங்கூர் மாநில அரசாங்கம் எப்போதும் இந்தியர்களின் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதாக சொன்ன அவர் இந்த ஆலய பிரச்சினைகளுக்கும் கூடிய விரைவில் தீர்வு காணப்பபடும் என்றார்.

