
கோலா சிலாங்கூர், ஏப் 22 – விரைவில் நடைபெறவிருக்கும் கோல குபு பாரு இடைத்தேர்தலில் ஒற்றுமை அரசாங்கம் முன்னிலைப்படுத்தும் வேட்பாளரை மலாய் வாக்காளர்கள் ஆதரிப்பதை உறுதி செய்ய பார்ட்டி அமானா நெகாரா கட்சி சொந்த வியூகத்தைக் கொண்டுள்ளது என்று கட்சியின் வியூக இயக்குநர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜூல்கிப்ளி அகமது கூறினார்.
எனினும், அந்த வியூகத்தை வெளிப்படுத்தாத அவர், ஒற்றுமை அரசாங்கத்திலுள்ள கட்சிகளின் தேர்தல் இயந்திரத்தின் ஒத்துழைப்பு மற்றும் முறைப்படுத்தப்பட்ட முயற்சியின் மூலம் வெற்றியை அடைய முடியும் என்றார்.
Selangor kini

