தீ விபத்தில் பள்ளி வகுப்பறைகள் சேதம்- அலோர் ஸ்டாரில் சம்பவம்

அலோர் ஸ்டார், ஏப் 22- சங்லுனில் உள்ள லாக்கா செலத்தான் தேசிய
பள்ளியில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் ஐந்து வகுப்பறைகள் அழிந்தன.
இந்த தீவிபத்து தொடர்பில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து சுமார் 12 நிமிடங்களில் தீயணைப்புக் குழுவினர்
சம்பவ இடத்தை அடைந்ததாகப் புக்கிட் காயு ஹீத்தாம் தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் தீயணைப்பு உதவி ஆணையர் ஜூல்கிப்ளி மானாப்
கூறினார்.

இந்த தீவிபத்தில் ஐந்து வகுப்பறைகள் 70 விழுக்காடு சேதமடைந்தன.
எனினும் அனைத்து மாணவர்களும் பள்ளி முடிந்து வீடு திரும்பி
விட்டதால் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. என்றார்
அவர்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles