கையில் புத்தகங்கள் தவழட்டும்! சிந்தனைகள் பெருகட்டும்! நல்வழி பிறக்கட்டும்!: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

உலக புத்தக தினம் என்பது புத்தகங்கள் மற்றும் வாசிப்பு உலகைக் கொண்டாடும் ஒரு வருடாந்திர உலகளாவிய இயக்கமாகும்.

இது 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.

பள்ளிக் குழந்தைகள் தங்களுக்குப் பிடித்த உடை அணிந்து பள்ளிக்குச் செல்லும் போது, அதனுடன் புத்தகத்தைக் கொண்டு வருவதை உள்ளடக்கியது

இந்நிலையில் புத்தக நாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

புதிய உலகத்திற்கான திறவுகோல் அறிவின் ஊற்று கல்விக்கான அடித்தளம் சிந்தனைக்கான தூண்டுகோல் மாற்றத்திற்கான கருவி மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை!

புத்தகங்களை வாசியுங்கள், நேசியுங்கள், பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

தினகரன்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles