
காளிதாஸ் சுப்ரமணியம்
மா. பவளச்செல்வன்
கோலகுபு பாரு ஏப்ரல் 24-
கோலகுபு பாரு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு இன்று ம இகா தேர்தல் நடவடிக்கை அறையை அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு, கின்ராரா சட்டமன்ற உறுப்பினர் இங் ஸி ஹான், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன், உதவித் தலைவர் டத்தோ டி மோகன், டத்தோ முருகையா உட்பட பலரும் இதில் கலந்து சிறப்பித்தனர்.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு மஇகா முழு ஆதரவு வழங்குவதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

