
கங்கார், ஏப்.30: மலேசியா-தாய்லாந்து எல்லையில் சூப்பிங்-பாடாங் பெசார் அருகே கடந்த சனிக்கிழமை 93,000 வெள்ளி மதிப்புள்ள 30 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அப்பகுதியில் ட்ரோன்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு பணிகளை மேற்கொண்ட வான் நடவடிக்கைக் குழு, பாதுகாப்பு வேலியின் தாய்லாந்து பக்கத்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நான்கு சக்கர இயக்க வாகனம் இருப்பதைக் கண்டறிந்தது
தொடர்ந்து அந்த போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது என்று பெர்லிஸ் மாநில காவல்துறை துணைத் தலைவர் எஸ்ஏசி பட்ருல்ஹிஷாம் பஹாருடின் கூறினார்.
bernama

