
செ.வே. முத்தமிழ் மன்னன்
மெங்கெலும்பு, மே 3-
பத்து காஜா நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 98 ஆண்டுகள் பழமை வாய்ந்த Gudwara மண்டபம் இப்போது முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமார் வழங்கிய 15 ஆயிரம் வெள்ளி மானியம் மற்றும் அரசாங்கம் வழங்கிய 93,000 வெள்ளி மானியத்தால் மறு சீரமைக்கப்பட்ட இந்த மண்டபம் இப்போது கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
இந்த மண்டபத்தை சிறப்பான முறையில் சீரமைப்பு செய்த நிர்வாகக் குழுவினரை சிவகுமார் வெகுவாக பாராட்டினார்.
தமது தொகுதி மக்களுக்கு எப்போதும் ஆதரவு தொடரும் என அவர் சொன்னார்.

