
கோலாலம்பூர் மே
அன்னை என்னும் ஆலயம்
அன்பில் வந்த காவியம்
கண்ணில் நின்ற ஓவியம்
தியாகத்தின் மறுஉருவமாய் இருக்கும் அன்னையர்கள் அனைவருக்கும் இனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
ஆலயத்தின் கருவறையைவிட, சிறந்த இடம் அன்னையின் கருவறை என்றார் ஒளவையார்.
குழந்தையைக் கருவில் சுமக்க ஆரம்பித்தது முதல், மிக மிகக் கவனமாக இருந்து பிடித்ததைத் தள்ளி வைத்து, பிடிக்காததை உண்டு கருவிலேயே பல சிக்கல்களையும், சவால்களையும் சந்திப்பதுதான் தாய்மை.
அப்படி ஈன்றெடுக்கும் குழந்தையைத் தாலாட்டி, சீராட்டி வளர்த்து ஆளாக்கி விடும் வரை அன்னையின் தியாகம் ஓய்வதில்லை என்று ம இகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தமது வாழத்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

