
உலு திராம், மே 17-
ஜொகூர் மாநிலத்தில் உள்ள உலு திராம் போலீஸ் நிலையத்தில் இன்று அதிகாலை நடந்தப்பட்ட தாக்குதலில் இரண்டு போலீஸ் அதிகாரிகள் உயிரிழந்தனர்.
மற்றொரு அதிகாரி படுகாயம் அடைந்துள்ளார்.
உலு திராம் போலீஸ் நிலையத்தில் நடத்தப்பட்ட தாக்குதலை ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் எம் குமார் இச்சம்பவத்தை உறுதிச் செய்துள்ளார்
இன்று அதிகாலை 2.45 மணியளவில் முகமூடி அணிந்த நபர் துப்பாக்கியுடன் நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைக் காவல் அதிகாரி சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
பிரி மலேசிய டூடே

