
கோலாலம்பூர், ஜூன் 13-
முன்பு கண்டதையும் பேசிய நீங்கள் இப்போது விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டும் என்று அரசுக்கு முன்னாள் அமைச்சர் கைரி ஜமாலுடின் கோரிக்கை விடுத்துள்ளார்.
டீசலுக்கான உதவித் தொகையை அரசாங்கம் அகற்றியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் நம்பிக்கை கூட்டணி குறை கூறுவதற்குப் பதிலாக அதன் மீதான விமர்சனங்களை ஏற்றுக் வேண்டும்.
குறிப்பாக விமர்சனங்களைச் சமாளிக்க வேண்டும் என்று கெலுவார் செகஜாப் நிகழ்ச்சியில் பேசியபோது கைரி இவ்வாறு தெரிவித்தார்.
நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது எல்லாவிதமான விஷயங்களையும் பேசிக் கொண்டிருந்தீர்கள். குறிப்பாக இன்று வெற்றி பெற்றால் நாளைக்கு எல்லாமே இலவசமாகி விடும் என்று சொன்னீர்கள்.
இப்போது நீங்கள் அரசாங்கமாக மாறும்போது, உங்களுக்குத் தெரியும். உங்கள் வாழ்க்கையில் முதல் முறையாக, ஒரு பொறுப்பான மனிதராக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, அதை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் உங்களுக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

